சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரமலான் பண்டிகை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புத் தேர்வு தேதிகள் மாற்றம் - முழு அட்டவணை

ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image

ரமலான் பண்டிகையின்போது நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு மாற்றம்

Updated On :5 மார்ச் 2021, 10:35 am

DIN

ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரமலான் பண்டிகை மே 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மே 13 மற்றும் 15-ஆம் தேதிகளில் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிறை முன்கூட்டியோ அல்லது மறுநாளோ தெரியும் நிலையில், ரமலான் பண்டிகை மே 13 அல்லது 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட வாய்ப்புள்ளதால், அன்றைய நாள்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு தேதிகளை மாற்றும்படி மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று, மே 13 மற்றும் 15 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த 10, 12 வகுப்புத் தேர்வுகள் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முன்னதாக, மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு சு. வெங்கடசன் அனுப்பியிருந்த கடிதத்தில், ரமலான் பண்டிகை மே-14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பிறையின் அடிப்படையில் மே-13 அல்லது 15-ஆம் தேதியிலும் பண்டிகை அமையலாம். 

ஆனால் இந்த இரு தேதியிலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவ, மாணவிகளை அவர்களது முக்கிய பண்டிகை நாளில் தேர்வெழுத வைப்பது சரியாக இருக்காது. 

எனவே, ரமலான் பண்டிகையன்று அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ தேர்வு தேதியை மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.