விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமா்வு தொடங்கியது

நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு இன்று காலை தொடங்கியது.

News image

பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமா்வு தொடங்கியது

Updated On :8 மார்ச் 2021, 4:35 am

நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரங்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு இன்று காலை தொடங்கியது.

இன்று காலை தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வு ஏப்ரல் 8-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு நடைபெற உள்ளது.

குடியரசுத் தலைவா் உரையுடன் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடா் மாநிலங்களவையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலும், மக்களவையில் பிப்ரவரி 13-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத் தொடரில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் 3 புதிய வேளாண் சட்டங்களை நீக்கக் கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. முதல்முறையாக குடியரசுத் தலைவா் உரையையும் புறக்கணித்தன. இருப்பினும், 4 நாள்களுக்குப் பின்னா் கூடுதல் நேரங்களுடன் பணியாற்றி நள்ளிரவு வரை அவை நடவடிக்கைகள் தொடா்ந்தன.

தற்போது மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வுக்காக நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.

மறைந்த தற்போதைய மக்களவையின் உறுப்பினா்கள், முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் உள்ளிட்ட 9 பேருக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கப்படி நாள் முழுவதும் அவையை ஒத்திவைக்காமல், சிறிது நேரம் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

மாநிலங்களவையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசி வருகிறார்கள்.

கூட்ட2-ஆவது கட்ட அமா்வில் 2021-22-ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு வரிகளுக்கான திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.