மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கொல்கத்தா தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலி

கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வே அலுவலகங்கள் அமைந்துள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

News image

கொல்கத்தா தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலி

Updated On :9 மார்ச் 2021, 5:21 am


கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வே அலுவலகங்கள் அமைந்துள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு புதிய கொயிலாகத் கட்டம் என்ற பல அடுக்குமாடிக் கட்டடத்தின் 13-வது மாடியில் தீ விபத்து நேரிட்டது.

இந்த தீ விபத்தில், தீயைக் கட்டுப்படுத்த வந்த 4 தீயணைப்பு வீரர்கள், ஒரு ரயில்வே அதிகாரி, ஆர்பிஎஃப் தலைமைக் காவலர், உதவி துணை ஆய்வாளர் என 9 பேர் பலியாகினர். மீட்புப் பணியில் ஈடுபட்ட மேலும் சில வீரர்கள் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது கட்டடத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டு, கட்டடம் முழுக்க குளிரூட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

பலியானவர்கள் அனைவரும், கட்டடத்தின் மின்தூக்கியில் செல்லும் போது, அதில் சிக்கி பலியாகியுள்ளனர். இந்த கட்டடத்தின் வரைபடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ரயில்வேக்கு சொந்தமான கட்டடம் என்றாலும், தீ விபத்து நடந்த போது மூத்த ரயில்வே அதிகாரிகள் ஒருவர் கூட இங்கு வரவில்லை. ஒரு வேளை இந்த விபத்தில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை என தீயை கட்டுப்படுத்தும் பணியை நள்ளிரவு வரை நேரில் பார்வையிட்ட முதல்வர் மம்தா கூறியுள்ளார்.

அதேவேளையில், தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.