முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கொல்கத்தா தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலி

கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வே அலுவலகங்கள் அமைந்துள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

News image
கொல்கத்தா தீ விபத்து: 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலி
Updated On :9 மார்ச் 2021, 5:21 am

PTI


கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே மற்றும் தென்கிழக்கு ரயில்வே அலுவலகங்கள் அமைந்துள்ள பல அடுக்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 4 தீயணைப்பு வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவு புதிய கொயிலாகத் கட்டம் என்ற பல அடுக்குமாடிக் கட்டடத்தின் 13-வது மாடியில் தீ விபத்து நேரிட்டது.

இந்த தீ விபத்தில், தீயைக் கட்டுப்படுத்த வந்த 4 தீயணைப்பு வீரர்கள், ஒரு ரயில்வே அதிகாரி, ஆர்பிஎஃப் தலைமைக் காவலர், உதவி துணை ஆய்வாளர் என 9 பேர் பலியாகினர். மீட்புப் பணியில் ஈடுபட்ட மேலும் சில வீரர்கள் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது கட்டடத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டு, கட்டடம் முழுக்க குளிரூட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

பலியானவர்கள் அனைவரும், கட்டடத்தின் மின்தூக்கியில் செல்லும் போது, அதில் சிக்கி பலியாகியுள்ளனர். இந்த கட்டடத்தின் வரைபடம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ரயில்வேக்கு சொந்தமான கட்டடம் என்றாலும், தீ விபத்து நடந்த போது மூத்த ரயில்வே அதிகாரிகள் ஒருவர் கூட இங்கு வரவில்லை. ஒரு வேளை இந்த விபத்தில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை என தீயை கட்டுப்படுத்தும் பணியை நள்ளிரவு வரை நேரில் பார்வையிட்ட முதல்வர் மம்தா கூறியுள்ளார்.

அதேவேளையில், தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.