மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்

உத்தரகண்ட் மாநில அமைச்சரவையில் புதிதாக 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

News image

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்

Updated On :12 மார்ச் 2021, 2:27 pm

உத்தரகண்ட் மாநில அமைச்சரவையில் புதிதாக 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

உத்தரகண்ட் மாநில பாஜகவில் எழுந்த அதிருப்தி காரணமாக கட்சியின் மத்திய தலைமையின் உத்தரவின் பேரில் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் (60) தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். 

இந்நிலையில் புதிய முதல்வராக  பாஜக எம்.பி. தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை டேராடூனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கத்தை முதல்வர் தீரத் சிங் ராவத் மேற்கொண்டுள்ளார்.

ரேகா ஆர்யா, தன் சிங் ராவத், சுவாமி யதிஸ்வரானந்த், சத்பால் மகாராஜ், பன்சிதர் பகத், ஹரக் சிங் ராவத், பிஷன் சிங் சுபால், யஷ்பால் ஆர்யா, அரவிந்த் பாண்டே, கணேஷ் ஜோஷி மற்றும் சுபோத் யூனியல் ஆகியோருக்கு வெள்ளிக்கிழமை ஆளுநர் ராணி மெளரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.