மக்களின் கவனக்குறைவால் கரோனா மீண்டும் பரவுகிறது: ஹர்ஷ் வர்தன்
மக்களின் கவனக்குறைவால் கரோனா தொற்று மீண்டும் பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.


மக்களின் கவனக்குறைவால் கரோனா தொற்று மீண்டும் பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''நாட்டில் 6 மாநிலங்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் கரோனா பரவல் மீது அலட்சியம் காட்டுவது பொருத்தமான நடவடிக்கையாக இருக்காது.
நாட்டில் பலவேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...