புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மந்தமாக உள்ளது: நாடாளுமன்ற நிலைக் குழு

​கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கவலை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :15 மார்ச் 2021, 4:53 pm


கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகவும் மந்தமாக இருப்பதாக உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கவலை தெரிவித்துள்ளது.

இதுபற்றி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இதுவரை மொத்த மக்கள் தொகையில் 1 சதவிகிதத்துக்கும் குறைவாகவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் சென்றால் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க பல ஆண்டுகள் ஆகும்.

ஏராளமானவர்கள் இரண்டாவது முறை செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை. இது மிகப் பெரிய பிரச்னை.

எனவே மத்தியப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச காவல் துறையினர் பரிந்துரைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அறிவுறுத்துகிறது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.