

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நாய் கடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் நாயின் உரிமையாளருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தின் ஸ்ரீகிருஷ்ணா நகரில் வசித்து வரும் மருத்துவர் சங்கீதா விஜய் பால்கோட் என்பர் வளர்த்து வந்த நாய், 9 வயது சிறுவனை கடித்துள்ளது.
இதில் காயமடைந்த சிறுவனின் தாயார் காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு நாக்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாய் கடித்ததில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்றளவும் சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிமன்றம், இதனால் நாயின் உரிமையாளருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெறப்படும் ரூ.50 ஆயிரம் அபராதத் தொகையினை பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயாரிடம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.