தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 25,833 பேருக்கு கரோனா பாதிப்பு; 58 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 25,833 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :18 மார்ச் 2021, 4:48 pm

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 25,833 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,96,340ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 58 பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 53,138ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 12,764 குணமடைந்தனர். இதுவரை 21,75,565 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,66,353 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 8,13,211 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பரவலின் 2-ஆவது அலை தொடங்கிவிட்டது. வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.