ராஜஸ்தான்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூவர் பலி
ராஜஸ்தானின் சித்தோர்கர் நகரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.


ராஜஸ்தானின் சித்தோர்கர் நகரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
சித்தோர்கர் மாவட்டத் தலைமையகத்தின் சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதாப் நகரின் கெடா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சித்தோர்கர் துணை போலீஸ் சூப்பிரண்டு அமித் குமார் இதுகுறித்து, 'வீட்டில் எரிவாயு கசிந்து ஏதோ வெடித்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் வீட்டின் மேற்கூரை சரிந்துள்ளது. வீட்டில் இருந்த மூவர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களது நிலையும் கவலைக்கிடமாக உள்ளது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...