நடைபெற உள்ள கேரள மாநில சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆளும் இடது முன்னணி சனிக்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
நடைபெற உள்ள 5 மாநில சட்டபேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் கேரளத்தில் ஆளும் இடது முன்னணி சனிக்கிழமை தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்தத் தேர்தல் அறிக்கையில் புதிதாக 40 லட்சம் வேலைவாய்ப்புகள், இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகை, தொழில்துறையில் ரூ.10,000 கோடி முதலீடு, பல்வேறு பயனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் சனிக்கிழமை வெளியானது குறிப்பிடத்தக்கது.