கேரளத்தில் மார்ச் 25 முதல் பிரசாரத்தை தொடங்கும் ராகுல் காந்தி!
கேரள பேரவைத் தேர்தலையொட்டி ராகுல் காந்தியின் பிரசாரம் குறித்து...

ராகுல் காந்தி
கோப்புப் படம்

ராகுல் காந்தி
கோப்புப் படம்
கேரள மாநிலத்தில் வரும் ஏப். 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 25 ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி.
அசாம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நாளை(மார்ச் 23) என்பதால், அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, 55 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், 37 வேட்பாளர்கள் பட்டியலை இரண்டாம் கட்டமாக அண்மையில் வெளியிட்டது.
இத்துடன் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎஃப்) தாங்கள் போட்டியிடும் 92 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் காங்கிரஸ் அறிவித்தது.
இந்த நிலையில், கேரள சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மார்ச் 25 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்துக்கு ஏப். 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...