சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு: ஒடிசாவில் நிறைவேற்றம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

News image

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு: ஒடிசாவில் நிறைவேற்றம்

Updated On :23 மார்ச் 2021, 10:15 am

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 15% இடஒதுக்கீடு வழங்குவதற்கான முன்மொழிவை கடந்த ஆண்டு மாநில அமைச்சரவை வழங்கியது. அதனைத் தொடர்ந்து உயர்மட்ட குழுவை மாநில அரசு கடந்த ஜனவரி மாதம் அமைத்தது. 

இந்நிலையில் அந்த குழுவின் பரிந்துரைப்படி மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை முதல்வர் நவீன் பட்நாயக் தாக்கல் செய்தார். 

அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.