பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3,176 பேருக்கு பாதிப்பு

பஞ்சாபில் ஒரேநாளில் 3,176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3,176 பேருக்கு பாதிப்பு

பஞ்சாபில் ஒரேநாளில் 3,176 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 39406 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், புதிதாக 3,176 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,26,059ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 59 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 6,576ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,816 பேர் குணமடைந்தனர். 
இதுவரை 1,96,831 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 22,652 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 1,52,596 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com