பெங்களூருவில் மார்ச் மாதத்தில் மட்டும் 10 வயதுக்குள்பட்ட 470க்கும் மேற்பட்ட குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் 1 முதல் 26 ஆம் தேதி வரை பெங்களூருவில் 244 சிறுவர்கள் மற்றும் 228 சிறுமிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் குழந்தைகளிடம் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் குழந்தைகள் வெளியில் செல்வதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் பள்ளிகள் செயல்படுவதும் இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் பள்ளிகள் செயல்பட்டால் குழந்தைகளிடையே கரோனா பரவல் அதிகரிக்கும் என்றும் அதனால் அதிக ஆபத்தும் உள்ளதாகவும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியரும் தலைமை தொற்றுநோயியல் தலைவருமான டாக்டர் கிரிதாரா ஆர் பாபு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


