கர்நாடகத்தில் அடுத்த 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றி அந்த அரசு தெரிவித்தது:
"அடுத்த 15 நாள்களுக்குப் போராட்டங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கிடையாது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. எனவே, இன்று முதல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது. பொது முடக்கம் இருக்காது. முகக் கவசம் அணியாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளி, கல்லூரிகள் மூடப்போவதில்லை. பள்ளிகளை மூடுவது குறித்து கருத்துகளைக் கேட்டுப் பெற்றுள்ளோம். 15 நாள்களில் தேர்வுகள் முடிந்தவுடன் அதுகுறித்து ஆய்வு செய்யப்படும்."
கர்நாடகத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்ச் தொடக்கத்தில் 300 என்ற கணக்கில் இருந்து வந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை மாத இறுதியில் 3000 என்ற கணக்கில் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”இந்த தொண்டையோடு எப்புடிடா?” சீமானை பாடச் சொன்ன தொண்டர்கள்! | NTK

தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்
டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!

எடப்பாடியின் அரசியல் அனுபவம்: உதயநிதி விமர்சனம்!
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


