பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்கப்படுவதில்லை என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
"நாடு முழுவதிலும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர விகிதம் 5.65 சதவிகிதம். மகாராஷ்டிரத்தில் இதன் வாராந்திர விகிதம் 23 சதவிகிதம். பஞ்சாபில் 8.82 சதவிகிதம், சத்தீஸ்கரில் 8 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 7.82 சதவிகிதம், தமிழகத்தில் 2.50 சதவிகிதம், கர்நாடகத்தில் 2.45 சதவிகிதம், குஜராத்தில் 2.2 சதவிகிதம், தில்லியில் 2.04 சதவிகிதம்.
இந்த மாநில பிரதிநிதிகளிடம் பேசினோம். கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்போது பரிசோதனை எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கவில்லை என்றோம். ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளைக் கொண்டு பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம்.
பெரும்பாலான மாநிலங்களில் தனிமைப்படுத்துதல் கடைப்பிடிக்கப்படவில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால், வீட்டில் தனிமையில் இருக்கிறார்களா என்பதைக் கண்காணிப்பதில்லை. அப்படி கடைப்பிடிக்கவில்லை என்றால், அவர்களை ஏதேனும் தங்குமிடத்தில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈஸ்டர் திருநாள் வழிபாடு!

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

சமூக ஊடகங்களிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்!

விஜய்யை பார்க்கச் சென்று இளைஞர்கள் விபத்தில் சிக்குவது வருத்தமளிக்கிறது: காளியம்மாள்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


