/

கேரளத்தில் புதிதாக 2,653 பேருக்கு கரோனா

​கேரளத்தில் புதிதாக 2,653 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :31 மார்ச் 2021, 2:04 pm


கேரளத்தில் புதிதாக 2,653 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 49,427 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 5.37 சதவிகிதமாக உள்ளது. கரோனா தொற்றுக்கு மேலும் 15 பேர் பலியானது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,621 ஆக உயர்ந்துள்ளது.

கேரளத்தில் இதுவரை மொத்தம் 10,94,404 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய நிலவரப்படி 25,249 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.