ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 70 வயதான சுற்றுலாப் பயணி கரோனா பாதித்து மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மார்ச் 30ம் தேதி புனேவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஸ்ரீநகரின் மார்பு நோய்கள் தொடர்பான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர், நகரத்தின் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்புச் சிகிச்சைக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டார். அங்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, அவருக்கு கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அவருக்கு நிமோனியா காய்ச்சலும் இருந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் தனது மகனுடன் ஸ்ரீநகருக்கு வந்திருந்தார், இருவரும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் எதிர்மறையாக வந்தது. தற்போது அவருடைய மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜம்மு-காஷ்மீரில் செவ்வாயன்று புதிதாக 359 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி!

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


