விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தெலங்கானாவில் தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

தீ விபத்து ஏற்பட்ட பேருந்து. - ANI

Updated On :27 ஏப்ரல் 2026, 4:57 am

தெலங்கானாவில் தனியார் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், மேடக்கிலிருந்து ஹைதராபாத் நோக்கி திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், "மேடக்கிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, இன்று அதிகாலை மேடக் மாவட்டத்தின் மசாய்பேட்டில் தீப்பிடித்தது. பழுதுபார்ப்பதற்காக ஹைதராபாத் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் மட்டுமே இருந்தனர்.

தீயைக் கண்டதும் அவர்கள் உடனடியாகக் கீழே இறங்கினர். மேலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று தெரிவித்தார்.

Summary

A private bus travelling from Medak to Hyderabad caught fire in the early hours of Monday, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.