பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!

குஜராத் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளது குறித்து...

News image

சாயன ஆலையில் தீ விபத்து... - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:20 pm IST

குஜராத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரூச் மாவட்டத்தின் ஜகாடியாவில் உள்ள குஜராத் தொழிற்சாலை மேம்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் வியாழக்கிழமை (ஏப். 23) மதியம் 1 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 16 தொழிலாளர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீயணைக்கும் நடவடிக்கைகளுக்காக அங்கலேஷ்வர் பகுதியில் இருந்தும் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு களமிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

16 workers sustained severe injuries in a massive fire accident at a chemical plant in Gujarat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.