விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் 8 அன்று ராஷ்ட்ரிய இஸ்பத் நிகம் லிமிடெட் (விசாகப்பட்டினம் எஃகு ஆலை) நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இன்று மேலும் ஒரு தொழிலாளி கடுமையான தீக்காயங்களால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பைதிராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் மாவட்ட இணை ஆட்சியர் ஜி. வித்யாத்ரி தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
உடற்கூறாய்வுக்காக அவரது உடல் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர், பைதிராஜுவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
காயமடைந்த ஆறு பேரில் 90 சதவீத தீக்காயங்களுக்கு ஆளான இருவரில் பைதிராஜுவும் ஒருவர் என்று இணை ஆட்சியர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: பலி 8-ஆக உயர்வு! பிரதமர் இரங்கல்

விசாகப்பட்டினம்: எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் 5 தொழிலாளர்கள் பலி!

நல்லூா் அருகே தேங்காய் நாா் ஆலையில் தீ விபத்து
காகித ஆலையில் ரசாயனக் கசிவு: அமெரிக்காவில் 11 பேர் பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




