எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

விசாகப்பட்டினம்: எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் 5 தொழிலாளர்கள் பலி!

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் 5 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பற்றி...

News image

பலி - பிரதிப் படம்

Updated On :8 ஜூன் 2026, 7:17 pm IST

விசாகப்பட்டினத்தில் உள்ள எஃகு ஆலையில் உருகிய இரும்பு கொட்டியதில் குறைந்தது 5 தொழிலாளர்கள் பலியானதாக அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூன் 8) தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பத் நிகாம் லிமிடெட் (விசாகப்பட்டினம் எஃகு ஆலை) தொழிற்சாலையில், கிரேனில் கொண்டு செல்லப்பட்ட தொட்டியிலிருந்து 1,600 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்த உருகிய இரும்பு எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் மீது கொட்டியது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பணியாளர்கள், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதுவரை, ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பத்திரிகை செய்தியில், தொழில் விபத்து ஒன்றில் பல தொழிலாளர்கள் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த எந்தத் தகவலும் அதில் வெளியிடப்படவில்லை.

மேலும், இந்தச் சம்பவத்துக்கு ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

Summary

Officials stated on Monday (June 8) that at least five workers died after molten iron spilled at the steel plant in Visakhapatnam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.