சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

கரோனா பரவல்: உ.பி.யில் ஏப்.4 வரை பள்ளிகள் மூட உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 4 வரை பள்ளிகள் மூடப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது. 

News image

உ.பி.யில் ஏப்.4 வரை பள்ளிகள் மூட உத்தரவு

Updated On :31 மார்ச் 2021, 11:35 am IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் ஏப்ரல் 4 வரை பள்ளிகள் மூடப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை பள்ளிகள் மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. 

இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மேலும் நான்கு நாள்களுக்குப் பள்ளிகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை இரவு வரை, மேலும் 918 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது. 10 பேர் உயிரிழந்தனர். ஒரேநாளில் 446 புதிய வழக்குகளுடன் லக்னோ முதலிடத்தில் உள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்தும் ஊழியர்களுக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். தனியார்த் துறையிலும் இதேபோன்ற ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.