மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே தீ விபத்து: 7 கடைகள் எரிந்து நாசம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

News image

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே தீ விபத்து

Updated On :4 மே 2021, 6:06 am

ANI

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே இருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலுக்கு அருகில் கிட்டத்தட்ட 150 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 6.45 மணியளவில் கடைகளுக்கு அருகே செல்லும் மின்வையரில் மின் கசிவு ஏற்பட்ட நிலையில், அங்குள்ள 7 கடைகளுக்கு தீ மளமளவெனப் பரவியது. 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடைபெற்ற நேரத்தில் கடைகளில் யாரும் இல்லாததால், ‘உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 

மேலும், அப்பகுதியில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.