12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரம், கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம் உள்பட 12 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதில், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
மேலும், ஒன்பது மாநிலங்களில் மே 1-ம் தேதி வரை 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 71 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.