தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கர்நாடகம்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் பலி

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :5 மே 2021, 7:34 am

DIN

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

நாடு முழுவதும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. 

இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட போதிய சிகிச்சை முறைகள் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. 

ஹூப்ளியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து ஒன்றரை மணி நேர இடைவெளியில் 5 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

முன்னதாக திங்கள்கிழமை கர்நாடகத்தின் சமராஜ நகர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் உள்பட 24 பேர், ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.