தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் தனிமைப்படுத்துதலில் இருந்தார்.
தற்போது அவருக்கு, ரேபிட் விரைவு பரிசோதனை மற்றும் ஆர்டிபிசிஆர் சோதனைகள் செய்யப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது. எனவே, தெலங்கானா முதல்வர் கரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவரது நுரையீரல் சீராக இயங்குவதாகவும், தொற்று எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்-