சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: குடியரசுத் தலைவருக்கு ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கடிதம்

கரோனா பேரிடர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

News image

ஆதிர் ரஞ்சன் சௌத்ரி

Updated On :10 மே 2021, 11:30 am

DIN

கரோனா பேரிடர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்நிலையில் கரோனா பேரிடர் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில், 'கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் கரோனா நிலவரம் என்ன என்பதை அந்தந்த தொகுதி உறுப்பினர்கள் தெரிவிப்பதன் மூலமாக பாதிக்கப்படும் மக்களுக்கு விரைந்து உதவ முடியும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.