47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மேற்கு வங்கம்: ரம்ஜான் நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மட்டும் அனுமதி

மேற்கு வங்கத்தில் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓரிடத்தில் 50 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

News image
முதல்வர் மம்தா பானர்ஜி
Updated On :10 மே 2021, 10:49 am

DIN

மேற்கு வங்கத்தில் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஓரிடத்தில் 50 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்த ஆண்டு கொல்கத்தாவில் ரெட் சாலையில் ஈத் பிரார்த்தனை கூட்டம் நடைபெறாது. அதிகபட்சமாக மத மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

எனவே முடிந்தவரை வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்யுங்கள். பெரிய கூட்டங்கள் எதுவும் நடத்த வேண்டாம் என்று முஸ்லீம் தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 

மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து மாநில செயலகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.