அசாமில் நாளை கூடுகிறது முதல் அமைச்சரவைக் கூட்டம்
அசாம் மாநில முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (மே 11) நடைபெறுகிறது.


அசாம் மாநில முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (மே 11) நடைபெறுகிறது.
இதில் கரோனா பரவல் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இது குறித்து பேசிய முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, அசாமில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. நாளை அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கரோனா பரவல் குறித்து அனைத்துத் தரப்பிலிருந்தும் கருத்துகள் கேட்கப்படவுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...