மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாமில் நாளை கூடுகிறது முதல் அமைச்சரவைக் கூட்டம்

அசாம் மாநில முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (மே 11) நடைபெறுகிறது.

News image
ஹிமந்த விஸ்வ சர்மா
Updated On :10 மே 2021, 9:48 am

DIN

அசாம் மாநில முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்றதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவைக் கூட்டம் நாளை (மே 11) நடைபெறுகிறது.

இதில் கரோனா பரவல் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இது குறித்து பேசிய முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, அசாமில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி வருகிறது. நாளை அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கரோனா பரவல் குறித்து அனைத்துத் தரப்பிலிருந்தும் கருத்துகள் கேட்கப்படவுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.