புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா காரணமாக 12 பெண்கள் உள்பட 23 நோயாளிகள் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 988-ஐ தொட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி,
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 1,266 பேர் தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ஒரேநாளில் 1,108 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 14,169 சிகிச்யைல் உள்ளனர். இதில், 12,091 பேர் வீட்டில் தனிமையில் உள்ளனர்.
புதுச்சேரி தலைமையக நிலவரப்படி அதிகபட்சமாக 1,080 பேரும், காரைக்கால் (92), யானம் (79), மாஹே (15) ஆகிய இடங்களில் புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரி தலைமையகத்தில் அதிகபட்சம் 17 இறப்புகளும், காரைக்கால் 3, மாஹே 2 மற்றும் யானம் 1 இறப்புகளும் பதிவு செய்துள்ளது, இதையடுத்து தினசரி மொத்த இறப்பு எண்ணிக்கையை 23 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.