

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையினரும் ராணுவத்தினரும் இணைந்து அனந்த்நாக் பகுதியைச் சுற்றி வளைத்தனர். கோக்கர்நாகில் வைலூவில் தீவிரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
அதைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
‘
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடந்துவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.