இமாசலில் மே 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மாநிலம் தழுவிய கரோனா ஊரடங்கு உத்தரவை மே 26 காலை வரை நீட்டித்து இமாசல பிரதேச அமைச்சரவை சனிக்கிழமை முடிவு செய்தது.
இமாசலில் மே 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு
இமாசலில் மே 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு
Updated on
1 min read

மாநிலம் தழுவிய கரோனா ஊரடங்கு உத்தரவை மே 26 காலை வரை நீட்டித்து இமாசல பிரதேச அமைச்சரவை சனிக்கிழமை முடிவு செய்தது.

இருப்பினும், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மூன்று மணி நேரம் திறக்க அனுமதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையிலான அமைச்சரவை, 

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், 200 படுக்கை வசதியுள்ள மருத்துவக் கல்லூரிகள், மண்டல மற்றும் பிராந்திய மருத்துவமனைகள் வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. 

மேலும், கரோனா நோயாளிகளின் தகனத்திற்கு மாநில வனத்துறை இலவச மரக்கட்டைகளை வழங்கும் என்று கூறியுள்ளது. 

இதையடுத்து, 20 பேருக்கு மிகாமல் வீடுகளில் மட்டுமே திருமணங்களை நடத்த வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. திருமண ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com