

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கன்மோவில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் தீவிரவாதி இருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிரவாதிகள் மறைந்திருப்பதை அறிந்த காவல்துறையினரும், ராணுவத்தினரும் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.