கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்களுக்கு 16,809 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கல்: ஒடிசா காவல்துறை தகவல்

கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒடிசா கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 16,809 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொண்ட 919 டேங்கர்களை வழங்கியுள்ளது. 

News image
Updated On :19 மே 2021, 10:08 am

DIN

கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் ஒடிசா கடந்த 27 நாட்களில் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 16,809 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனைக் கொண்ட 919 டேங்கர்களை வழங்கியுள்ளது. 

கரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் எதிர்பாராத அளவுக்கு கடும் பாதிப்பை  ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. 

உற்பத்தி செய்யும் மாநிலங்களில் இருந்து மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கடந்த 27 நாட்களில் சுமார் 16,809 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்ற 919 டேங்கர்கள் ஒடிசாவிலிருந்து 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளதாக ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது. 

1,335.942 மெட்ரிக் டன்களுடன் அங்கூலில் இருந்து 83 டேங்கர்களும், 3964.23 மெட்ரிக் டன்களுடன் தெங்கனலில் இருந்து 248 டேங்கர்களும், ஜஜ்பூரிலிருந்து 4717.877 மெட்ரிக் டன்களுடன் 232 டேங்கர்களும், ரூர்கேலாவிலிருந்து 6788.994 மெட்ரிக் டன்களுடன் 356 டேங்கர்களும் அனுப்பப்பட்டது. 

இதில், மொத்தம் 282 டேங்கர் மருத்துவ ஆக்ஸிஜன் ஆந்திரத்துக்கும் 236 டேங்கர்கள் தெலங்கானாவிற்கும் 131 டேங்கர் ஆக்ஸிஜன் ஹரியானாவிற்கும், 61 டேங்கர் மத்தியப் பிரதேசத்திற்கும், 52 உத்தரப்பிரதேசத்திற்கும், 22 தில்லிக்கு, 3 டேங்கர்கள் பிகாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கண்காணிப்பு மூலம் உடனடி மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளது, இதனால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு எந்தவித தாமதமும் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்றும் ஒடிசா காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.