ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு எப்போது தடுப்பூசி?

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகே கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image
கரோனாவிலிருந்து குணமானவர்கள் எப்போது தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்?
Updated On :19 மே 2021, 11:23 am

DIN

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகே கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

வேறு பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருவோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும்.

அத்தகைய இக்கட்டான சூழலில் 4 வாரங்கள் முதல் 8 வாரங்கள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும். 

கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.