கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தில்லி தயாராகி வருகிறது: கேஜரிவால்

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தில்லி அரசு தயாராகி வருவதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
Updated On :24 மே 2021, 11:19 am

ANI

கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தில்லி அரசு தயாராகி வருவதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் ஆலையை நேரில் ஆய்வு செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சீனாவிலிருந்து சுமார் 6,000 ஆக்ஸிஜன் உருளைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

இந்த ஆக்ஸிஜன் ஆலையின் உற்பத்தித் திறன் 55 மெட்ரிக் டன்கள். இதற்காக சீனாவிலிருந்து சுமார் 6,000 ஆக்ஸிஜன் உருளைகள் இறக்குமதி செய்யப்பட்டன. இதனைத் தவிர, இந்த கரோனா காலத்தில் வேறு எதுவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

தில்லியில் ஏப்ரல் 19-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.