ஆந்திரம் - ஒடிசா எல்லையிலுள்ள சிலேரு ஆற்றில் நாட்டுப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் தொழிலாளரின் குழந்தை உயிரிழந்தது.
மேலும் விபத்தில் காணாமல் போன 8 பேரைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரம் - ஒடிசா எல்லையான சித்ரகொண்டா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் புலம்பெயர்த் தொழிலாளர்கள் தங்களது சொந்த கிராமங்களுக்கு படகு மூலம் சென்றுள்ளனர்.
ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் சாலை மார்க்கமாக காவல் துறை சோதனை நடைபெறும் என்பதால், ஆற்றைக் கடந்து செல்ல புலம்பெயர்த் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர்.
இரண்டு நாட்டுப் படகுகளில் சிலேரு ஆற்றை கடந்து செல்ல முயன்றனர். அப்போது ஒரு படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகில் இருந்தவர்கள் மற்றொரு படகில் ஏறியதால் அதிக எடையின் காரணமாக இரண்டாவது படகும் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
தகவலறிந்து வந்த காவல் துறையினர் மீட்புப் படையின் உதவியுடன் தேடுதல் பணிகளைத் தொடங்கினர். இதில் 15 மாத குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

