பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வடக்கு ஒடிசாவின் பல மாவட்டங்களில் கனமழை

யாஸ் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக, வடக்கு ஒடிசாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

News image

வடக்கு ஒடிசாவின் பல மாவட்டங்களில் கனமழை

Updated On :27 மே 2021, 12:20 pm


புவனேஸ்வரம்: யாஸ் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில், அதன் தாக்கம் காரணமாக, வடக்கு ஒடிசாவின் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

கோயின்ஜார் மாவட்டம் ஜோடா என்ற பகுதியில் மிக அதிகனமழை பெய்துள்ளது. இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 268.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மயூர்பஞ்ச் மாவட்டம் ஜாஷ்பூர் பகுதியில் 254.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்று புவனேஸ்வரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுந்தர்கர் மாவட்டம் லதிகதா பகுதியில் 213 மி.மீ. மழையும், வாசுதேவ்பூர் மாவட்டம் பத்ராக் பகுதியில் 195 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இந்த மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா கடலோரப் பகுதியில் புதன்கிழமை மதியம் கரையைக் கடந்தது. இதையொட்டி, ஒடிசாவின் வடக்குப் பகுதியிலும் மேற்கு வங்கத்திலும் கடலோரப் பகுதிகளில் 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. பாலாசோரில் இருந்து தெற்கே 50 கி.மீ. தொலைவில் காலை 9 மணிக்கு யாஸ் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. மதியம் 1.30 மணியளவில் புயல் முழுமையாகக் கரையைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.