ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள் நாடு முழுவதும் இன்று (வியாழக் கிழமை) அனுசரிக்கப்பட்டுள்ளது.
நேருவின் நினைவுநாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி நேருவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.