தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கானாபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. காவல்துறையினரும் ராணுவத்தினரும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியைச் சுற்றி வளைத்துத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகள் மறைந்திருந்து பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.