இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது: ப.சிதம்பரம் 

விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது என்ற ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

News image
Updated On :28 மே 2021, 10:56 am

DIN

விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது என்ற ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

மத்திய அரசு கொண்டு வந்த பேரழிவு வரும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் ஒரு தொற்றுநோய்க்கான போராட்டத்தின் மத்தியிலும் போராட்டம் நடத்தி வருவது என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களைக் கடந்துள்ளது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது. 

மத்திய அரசு புதிய திருப்பமாக, கரோனா வைரஸ் காலத்துக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தப்படுவது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, கரோனா தொற்று காலத்திலும் அழிவுதரக்கூடிய வேளாண் சட்டங்கள் நீண்டகாலமாக இருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. விசாயிகளும் தங்களது போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்கள், அரசும் பிடிவாதமாக இருக்கிறது. 

மக்களின் சேவனகாக மத்திய அரசு இருந்தால், பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதிய ஆலோசனைகளைத் தொடங்க வேண்டும் ” எனத் தெரிவி்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.