ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சக்திவாய்ந்த வெடிக்கும் கருவியைப் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை கண்டுபிடித்தனர்.
புல்வாமா மாவட்டத்தின் பன்ஸ்காம் கிராமத்தில் உள்ள பழத்தோட்டத்தில் திங்கள்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.