ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பாக வெடிக்கவைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையின் கூட்டுப் படையினர், இன்று காலை அவந்திபோரா காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் ரயில்வே இணைப்புச் சாலையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியைக் கண்டுபிடித்து அகற்றினர். கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டு, பாதுகாப்பான முறையில் வெடிக்க வைக்கப்பட்டது.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.