சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்: சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. வாரத்தில் வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (மே 31) சென்செக்ஸ் 320 புள்ளிகள் வரை உயர்ந்தது.

News image
Updated On :31 மே 2021, 5:49 am

பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் தொடங்கியது. வாரத்தில் வர்த்தகத்தின் முதல் நாளான இன்று (மே 31) சென்செக்ஸ் 320 புள்ளிகள் வரை உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 317.84 புள்ளிகள் உயர்ந்து 51,740.72 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது மொத்த வர்த்தகத்தில் இது 0.66 சதவிகிதம் உயர்வாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 78.90 புள்ளிகள் உயர்ந்து 15,514.55 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மொத்த வர்த்தகத்தில் இது 0.53 சதவிகிதம் உயர்வாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 20 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. இதில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் 3.77 சதவிகிதமும், ஐசிஐசிஐ வங்கி 1.72 சதவிகிதமும், பாரதி ஏர்டெல் 1.69 சதவிகிதமும், ஐடிசி 1.62 சதவிகிதமும் உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.