வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாநிலங்கள் உருவான நாள்: மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட  மாநில மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 நவம்பர் 2021, 8:17 am

DIN

மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட  மாநில மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

1956 நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன.

அதுபோன்று, பஞ்சாப், சத்தீஸ்கர், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் நவம்பர் 1 ஆம் தேதி மாநில தினத்தைக் கொண்டாடுகின்றன. 

இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மேற்குறிப்பிட்ட மாநில மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியே மாநில தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இனி ஜூலை 18 ஆம் தேதி, அதாவது மெட்ராஸ் மாகாணம், 'தமிழ்நாடு' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்ட அன்றே 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.