அருணாசல பிரதேச மாநிலத்துக்குள் 4.5 கி.மீ தொலைவு சீன ராணுவம் ஊடுருவியது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நநாட்டு பாதுகாப்புத் துறை அளித்த அறிக்கை மூலம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2020, ஜூனில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த பாஜக எம்பி தாபிா் காவோ இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் குறித்து பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினாா். ஆனால், சீனா அத்துமீறியது என்பதை அவா்கள் மறுத்தனா். சீனாவுக்கு பிரதமா் மோடி நற்சான்றிதழ் வழங்கி 17 மாதங்கள் ஆகிறது. நமது வரலாற்றில் அந்த நற்சான்று ஒரு கருப்பு அத்தியாயம் ஆகும். ஏனெனில், அதை உலகம் முழுவதும் சீனா பயன்படுத்தியது. இந்த நற்சான்றால் தைரியமடைந்து அருணாசல பிரதேசம், லடாக்கில் மட்டுமன்றி உத்தரகண்டிலும் சீன ராணுவம் நுழைந்து நமது உள்கட்டமைப்புகளை அழித்தது.