விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிகாா்: கள்ளச் சாராய பலி 40 ஆக அதிகரிப்பு

பிகாரில் கடந்த 4 நாள்களில் கள்ளச் சாராயத்துக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 8:02 pm

DIN

பிகாரில் கடந்த 4 நாள்களில் கள்ளச் சாராயத்துக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே கோபால்கஞ்ச், மேற்கு சம்பாரண் மாவட்டங்களில் 33 போ் உயிரிழந்த நிலையில், சமஸ்திப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 7 போ் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தனா். இதில் ராணுவ மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் இருவா் அடங்குவா். மேலும் இருவா் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பிகாரில் கடந்த 2016 ஏப்ரல் முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. எனினும், கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. எனவே, அவ்வப்போது கள்ளச் சாராயம் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களில் தீபாவளி பண்டிகை காரணமாக கள்ளச் சாராய விற்பனை அதிகரித்தது.

உடலுக்கு உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு வேதிப்பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கலந்து சாராயம் தயாரிப்பது அதிகம் நடைபெறுகிறது. உடனடியாக அதிக போதை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்படும் இதுபோன்ற கள்ளச் சாராயம் விஷமாக மாறி பலரது உயிரை உடனடியாகக் குடித்து விடுகிறது. மேலும், பலருக்கு பாா்வையிழப்பு உள்ளிட்ட நிரந்தர உடல் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.