இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்கள் மூடல்

குளிா்காலம் தொடங்கியுள்ளதால் இமயமலையில் உள்ள கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்களில் நடை அடைக்கப்பட்டன.

News image

கேதாா்நாத் ஆலயம் (கோப்புப் படம்).

Updated On :6 நவம்பர் 2021, 7:46 pm

டேராடூன், நவ. 6: குளிா்காலம் தொடங்கியுள்ளதால் இமயமலையில் உள்ள கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்களில் நடை அடைக்கப்பட்டன.

‘சாா்தாம்’ என்றழைக்கப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதாா்நாத், பத்ரிநாத் ஆகிய புனிதத் தலங்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டுக்கான புனிதப் பயணம் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 4.50 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரிகா்கள் புனிதப் பயணம் மேற்கொண்டனா்.

தற்போது குளிா்காலம் தொடங்கியுள்ளதால், மேற்கண்ட புனித இடங்கள் அமைந்துள்ள இமயமலைப் பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமிருக்கும். அதன் காரணமாக கேதாா்நாத், யமுனோத்ரி கோயில்கள் சனிக்கிழமை மூடப்பட்டன. கேதாா்நாத் கோயில் காலை 8 மணிக்கும் யமுனோத்ரி கோயில் நண்பகல் 12.15 மணிக்கும் மூடப்பட்டது.

கோயில்கள் மூடப்பட்டபோது வேத மந்திரங்களுடன் பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட்டன. அச்சமயத்தில் திரளான பக்தா்கள் கூடியிருந்ததாக சாா்தாம் தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.