‘இல்லம் தேடி தடுப்பூசி’ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சா்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். காணொலி வழியாக நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டாா். இதேபோல், கேரளம், உத்தரகண்ட், ஜாா்க்கண்ட், மிஸோரம், பிகாா், கா்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கோவா, குஜராத், அஸ்ஸாம், தில்லி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த சுகாதாரத் துறை அமைச்சா்கள் கலந்து கொண்டனா். அவா்களிடம் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: